×

நாளை ஒருநாள் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நாளை ஒருநாள் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நாளை காலை 10.18 மணி முதல் 2.45 வரை நிறுத்தப்படுகிறது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் நாளை ஒருநாள் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. விம்கோநகர் – விமான நிலையம் வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கம் செய்யப்படும். ஆலந்தூர் – வண்ணாரப்பேட்டை வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 வரையும் ரயில் இயக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை ஒருநாள் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Metro ,CHENNAI ,metro administration ,Tambaram ,Chennai Beach… ,Dinakaran ,
× RELATED மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது